நிகழ்வுகள்
ஏகதின இலட்சார்ச்சனை
ஏகதின இலட்சார்ச்சனை ( 26-12-25) வெள்ளிக்கிழமை காலை 05.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து பூஜையுடன் இலட்சார்ச்சனை ஆரம்பமாகும். பகல் 11.00 மணிக்கு பூஜை நடைபெற்று தொடர்ந்தது இலட்சார்ச்சனை ஆரம்பமாகி மாலை 18.30 மணி வரை நடைபெற்று மாலை 19.00 மணிக்கு பூஜை, இலட்சார்ச்சனை பூர்த்தி, வசந்தமண்டப்ப்பூஜை இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வரும் அருட்காட்சியும் இடம்பெறும். இலட்சார்ச்சனையில் பங்குபற்ற விரும்பும் அடியார்கள் தேவஸ்தானத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மதியம் அன்னதானம் வழங்கப்படும்.
அறிவித்தல்
நாளை திங்கள்கிழமை (10/11/2025) கும்பாபிஷேக தினம் நடைபெறமாட்டாது. 2025 ஆம் ஆண்டு பங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி 2026 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கும்பாபிஷேக தினம் நடைபெறும்.